கிஷன்ஜி கொல்லப்பட்டார்
மாவோயிச தலைவர் கோடேஷ்வர ராவ் என்கிற கிஷன்ஜி மேற்கு வங்க திரினாமுல்
காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் போலிசாரால் நவம்பர் 24 ம் தேதி சுட்டுக்
கொல்லப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியின் எம் பி
ஜி விவேக்
ஆந்திராவில் நடைபெற்ற கிஷன்ஜியின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு
மரியாதை செலுத்துகிறார். கிஷன்ஜிதான் மறைவிடத்தில் இருந்து கொண்டு மமதா
பானர்ஜி அவர்களை முதல்வராக்குவதே எங்கள் முதன்மையான பணி என்று எட்டு பத்து
மாதங்களுக்கு முன்பு டிவி களுக்கு பேட்டி கொடுத்தவர். போலி என்கவுண்டரில்
போட்டு தள்ளி விட்டார்கள் என்று கிஷன்ஜியின் உறவினர்கள் குற்றம்
சாட்டுகிறார்கள்.
"வேறு வழியே இல்லாமல் தான் இவர் சுடப்பட்டார். இந்த
ஆபெரேஷன் பற்றி எனக்கு முன் கூட்டி எதுவும் தெரியாது. நானும் பத்திரிகை
மூலம்தான் முதலில் தெரிந்து கொண்டேன்" என்று மமதா கூறுகிறார். "நான்
நிர்வாகத்தில் தலையிடுவதே கிடையாது. போலிஸ் அவர்கள் பணியை செய்கிறார்கள்"
என்று வேறு ஜோக் அடித்துள்ளார். இருபது நாட்களுக்கு முன்னால் இவரே போலிஸ்
ஸ்டேஷனுக்கு நேரில் சென்று அவர் கட்சியை சார்ந்த இரண்டு தொண்டர்களை (?)
மீட்டு கொண்டு வந்ததை அதற்குள் மக்கள் மறந்திருப்பார்கள் என்று மமதா
நம்புகிறார் போலும். மாவோயிஸ்டுகளா, எங்கே இருக்கிறார்கள் என்று ஆட்சிக்கு
வரும் வரை அப்பாவியாக கேட்டார் மமதா. இப்போது "அவர்களின் நாசகர வேலைகளை
தடுக்கா விட்டால் நீங்கள் சும்மா விடுவீர்களா?" என்று மக்களை பார்த்து
கேட்கிறார். "வேலை முடிந்து விட்டது; எனவே காகித கப் போல் தூக்கி எரிந்து
விட்டார்" என்று மமதா பற்றி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
"தனி நபர்
கொலைகள் பிரச்சனைக்கு தீர்வாகாது. அரசியல்,பொருளாதார ரீதியாக அணுகுவதோடு
சட்டம் ஒழுங்கையும் நிலை நாட்ட முயற்சி எடுத்தால்தான் இப்பிரச்சனையை
தீர்க்க முடியும்" என்று தெளிவுபட கூறுகிறார் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்
சீதாராம் யெச்சுரி.
No comments:
Post a Comment